search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்
    X

    விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

    விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

    • சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும் தனியார் நிறுவனத்தின் இயக்குனருமான சிவபெருமான் தலைமை வகித்தார்.
    • புதுப்பட்டினம், பழையபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கோத்ரேஜ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    சீர்காழி, ஜூலை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள கடலோர புதுப்பட்டினம் கிராமத்தில் விவசாயிகளுக்கு இறால் நோய் எதிர்ப்பு மற்றும் மேலாண்மை குறித்த இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணரும் தனியார் நிறுவனத்தின் இயக்குனருமான சிவபெருமான் தலைமை வகித்தார். டாக்டர் பொன்னுசாமி, டாக்டர் உதயகுமார் கலந்துகொண்டு மழைக்காலங்களில் இறால் குட்டைகளில் நோய் வராமல் இருப்பதற்கு தடுக்கும் வழிமுறைகள்,நோய் எதிர்ப்பு மேலாண்மை, தீவனம் இடுதல் குறித்த தொழில்நுட்பம்,நோய் கட்டுப்படுத்துதல், உற்பத்தி செலவினங்களை குறைப்பதற்கான ஆலோசனை உள்ளிட்ட கருத்துக்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. புதுப்பட்டினம், தாண்டவன்குளம், தற்காஸ்,பழையபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் கோத்ரேஜ் நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×