search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மயிலாடுதுறை- சேலம் இடையே ரெயில் சேவை தொடக்கம்
    X

    புதிய ெரயில் சேவை தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    மயிலாடுதுறை- சேலம் இடையே ரெயில் சேவை தொடக்கம்

    • மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்கு புறப்பட்டது.
    • இந்த ரெயில் அனைத்து ரெயில் நிறுத்தங்களிலும் நின்று செல்லும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை -திருச்சி, திருச்சி - கரூர், கரூர்-சேலம் ஆகிய 3 ரெயில்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே ரெயில் சேவையாக மயிலாடுதுறை தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலாக இயக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.

    இதனிடையே இன்று காலை மயிலாடுதுறையில் இருந்து 6.20 மணிக்கு புறப்பட்ட இந்த ரயிலை ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கி வரவே ற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ரெயில் இன்ஜின் முன்புறம் மாலை அணி வித்தும் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    மேலும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

    முன்னதாக ரயில் ஓட்டுனர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

    இந்த ரயில் மயிலாடுதுறையில் இருந்து காலை 6.20 மணிக்குப் புறப்பட்டு கும்பகோணம் பாபநாசம் தஞ்சாவூர் வழியாக திருச்சிக்கு காலை 9.30 மணிக்கு சென்றடைகிறது.

    பின்னர் கரூர், நாமக்கல் வழியாக பிற்பகல் 1.45 மணிக்கு சேலம் சென்றடைகிறது.

    இதே போன்று மறு மார்க்கமாக சேலத்தில் மதியம் 2.05 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 6.05 மணிக்கு வந்தடைகிறது.

    பின்னர் இரவு 9.40 மணிக்கு மயிலாடுதுறை வந்து சேரும். இந்த ரயில் அனைத்து ரயில் நிறுத்தங்களிலும் நின்று செல்வது குறிப்பி டத்தக்கதாகும்.

    சேலத்தில் இருந்து கரூர் வரை இயக்கப்பட்ட ரெயில் இனிமேல் மயிலாடுதுறை வரை இயக்கப்பட இருப்பது ரயில் பயணிகள் மற்றும் வணிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

    Next Story
    ×