என் மலர்
உள்ளூர் செய்திகள்

பெருந்துறை அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி கணவன்-மனைவி பலி
- ERD0411092023: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள வி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). டெய்லர். இவரது மனைவி பழனியம்மாள் (50). இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக சுந்தரராஜ்,
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள வி.மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (55). டெய்லர். இவரது மனைவி பழனியம்மாள் (50).
இந்த நிலையில் இன்று காலை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு செல்வதற்காக சுந்தரராஜ், மனைவி பழனியம்மாளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து கிளம்பினார். சுந்தர்ராஜ் வண்டியை ஓட்ட பின்னால் பழனியம்மாள் அமர்ந்து வந்தார்.
அப்போது திங்களூர் - பெருந்துறை ரோட்டில் செல்லப்பம்பாளையம் பிரிவு அருகே இடது ஓரமாக சென்று கொண்டிருந்தபோது எதிர் திசையில் வந்த தனியார் பள்ளி வாகனம் எதிர்பாராத விதமாக சுந்தர்ராஜ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுந்தரராஜ் மற்றும் பழனியம்மாள் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கவுந்தப்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கணவன்,மனைவி 2 பேர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






