search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலப்பாளையம் சந்தைக்கு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு லஞ்சம் கேட்பதாக வியாபாரிகள் புகார் - ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி-பரபரப்பு
    X

    வியாபாரிகளிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    மேலப்பாளையம் சந்தைக்கு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு லஞ்சம் கேட்பதாக வியாபாரிகள் புகார் - ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி-பரபரப்பு

    • நெல்லை மேலப்பாளையத்தில் திங்கள்கிழமை தோறும் மாட்டுச்சந்தை செயல்படுகிறது.
    • பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாடுகள் கொண்டு வரப்படுகிறது.

    நெல்லை:

    நெல்லை மேலப்பா ளையத்தில் திங்கள் கிழமை தோறும் மாட்டுச்சந்தை செயல்படுகிறது.

    லஞ்சம் கேட்பதாக புகார்

    இங்கு நெல்லை மாவட்டம் மட்டுமல்லாமல் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மாடுகள் கொண்டு வரப்படுகிறது.

    இந்நிலையில் இங்கு மாடுகளை ஏற்றி வரும் வாகனங்களுக்கு ரூ. 700- ஐ லஞ்சமாக நாங்குநேரி மற்றும் கயத்தாறு சுங்கசாவடியில் ஒரு இயக்கத்தினர் கேட்பதாக கூறி வியாபாரிகள் இன்று மாட்டுச்சந்தையில் ஆர்ப் பாட்டம் நடத்த போவதாக தெரிவித்தனர்.

    இதையடுத்து மேலப்பா ளையம் போலீஸ் இன்ஸ் பெக்டர் பொன்ராஜ் தலை மையில் ஏராளமான காவல் துறையினர் அங்கு பாது காப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பரபரப்பு

    அப்போது ஆர்ப்பாட் டத்திற்கு வியாபாரிகளை ஒன்று திரட்ட முயன்ற ஆதித்தமிழர் பேரவை புறநகர் மாவட்ட செயலாளர் இளமாறன் மற்றும் சிலரை பிடித்து காவல்துறையினர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இதனால் மாட்டுச் சந்தையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×