search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேரன்மகாதேவியில் வியாபாரி திடீர் சாவு
    X

    சேரன்மகாதேவியில் வியாபாரி திடீர் சாவு

    • நேற்று வழக்கம்போல் பால சுப்பிரமணி சேரன்மகாதேவி அருகே உலகன்குளம் கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சாலை யோரத்தில் மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    களக்காடு அருகே உள்ள மாவடியை சேர்ந்தவர் பால சுப்பிரமணி(வயது 47). இவர் பேக்கரி பொருட்களை மோட்டார் சைக்கிள்களில் எடுத்துச்சென்று கிராமங் களில் விற்பனை செய்து வந்தார்.

    நேற்று வழக்கம்போல் சேரன்மகாதேவி அருகே உலகன்குளம் கிராமத்தில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சாலை யோரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சேரன்மகாதேவி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×