search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திசையன்விளை அருகே இன்று காலை அரசு பஸ் டயரில் சிக்கி வியாபாரி பலி
    X

    திசையன்விளை அருகே இன்று காலை அரசு பஸ் டயரில் சிக்கி வியாபாரி பலி

    • திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் பழ வியாபாரி. இவர் இன்று காலை திசையன்விளை பஸ் நிலையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
    • பஜார் பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே சென்றபோது அவரது பின்னால் வந்த அரசு பஸ் மொபெட் மீது எதிர்பாராதவிதமாக மோதியததில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

    திசையன்விளை:

    திசையன்விளை புளியடி தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 58). பழ வியாபாரி. இவர் இன்று காலை திசையன்விளை பஸ் நிலையம் நோக்கி மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    பஸ்சில் சிக்கினார்

    அங்கு பஜார் பகுதியில் உள்ள ஒரு வங்கி அருகே சென்றபோது அவரது பின்னால் வந்த அரசு பஸ் மொபெட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. அதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது தலைமீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியது.

    இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து திசையன்விளை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பலியான ராஜேந்திரன் உடலை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரான நாங்குநேரி அருகே உள்ள இலங்குளத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த ராஜேந்திரனின் மனைவி பிச்சைக்கனி தூத்துக்குடி மாவட்டம் படுக்கப்பத்து பிச்சுவிளை அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

    Next Story
    ×