என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தக்காளி விலை: இன்று கோயம்பேடு சந்தையில் 30 ரூபாய் அதிகரிப்பு
- நேற்று 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது
- இஞ்சி, பச்சை மிளகாய் விலையும் அதிகரித்துள்ளது
தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடர் மழையால் தக்காளி சாகுபடி குறைந்துள்ளது. தக்காளி சாகுபடி சீரடைய இன்னும் இரண்டு மூன்று வாரங்கள் ஆகலாம். இதனால் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்து காணப்படுகிறது.
நேற்று முதல் ரகம் தக்காளி கிலோ ஒன்றிற்கு 80 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று கிலோவுக்கு 30 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் விலையும் அதிகரித்துள்ளது. நேற்று 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பச்சை மிளகாய் இன்று இரண்டு மடங்கு விலை உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story






