என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கோயம்பேட்டில் தக்காளி விலை அதிகரிப்பு
- கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வந்தது.
- வெளிமார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-வரையிலும் விற்கப்படுகிறது.
போரூர்:
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் வட மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. இன்று 64 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு வந்தது.
கடந்த மாதம் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.20-க்கும் குறைவாகவே விற்கப்பட்டு வந்தது. தற்போது தக்காளி விலை அதிகரித்து ரூ.30-க்கு விற்கப்பட்டது.
பொங்கல் பண்டிகை காரணமாக விவசாய தொழிலாளர்கள் தக்காளி அறுவடை செய்வதற்கு அதிகளவில் செல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் தக்காளியின் வரத்து குறைந்து விலை அதிகரித்தது. தற்போது தக்காளி வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இன்று காலை மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.30-க்கு விற்பனை ஆனது. வெளிமார்க்கெட்டில் உள்ள சில்லரை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.40-வரையிலும் விற்கப்படுகிறது.
மார்க்கெட்டுக்கு வரும் தக்காளி லோடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இனி வரும் நாட்களில் தக்காளி விலை குறைய வாய்ப்பு உள்ளது என்று மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்