என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    களக்காடு அருகே புகையிலை விற்றவர் கைது
    X

    களக்காடு அருகே புகையிலை விற்றவர் கைது

    • களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கோவிலம்மாள்புரம், தெற்கு தெருவை சேர்ந்த சுடலைக்கண்ணு (வயது30) என்பவரின் கடையை சோதனை செய்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள கோவிலம்மாள்புரத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி மற்றும் போலீசார் கோவிலம்மாள்புரம், தெற்கு தெருவை சேர்ந்த சுடலைக்கண்ணு (வயது30) என்பவரின் கடையை சோதனை செய்தனர்.

    அப்போது, கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து சுடலைகண்ணுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 900 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களையும் போலீசார்பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×