search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் வெயில் குறைய வாய்ப்பு- வானிலை மையம் கணிப்பு
    X

    தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் வெயில் குறைய வாய்ப்பு- வானிலை மையம் கணிப்பு

    • சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது.
    • வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் கோடை வெயில் வாட்டி எடுத்தது.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. சென்னையில் 106 டிகிரிக்கும் அதிகமாகவே வெயில் பதிவாகி பகல் நேரங்களில் வெளியில் நடமாடுபவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த வெயிலின் தாக்கம் எப்போது குறையும் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் (17-ந் தேதி) முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, வருகிற 17-ந் தேதிக்கு பின்னர் வெயில் குறையும் என்று தெரிவித்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாக வாய்ப்பு உள்ளது. இதனால் வருகிற 18-ந் தேதி முதல் 3 நாட்களுக்கு மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×