என் மலர்
உள்ளூர் செய்திகள்

கார் மோதி தொழிலாளி பலி
- சாலையோரம் நடந்து சென்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த மாலையிட்டான் பகுதியைச் சேர்ந்தவர் அலாவுதீன் (வயது 60) தொழிலாளி. இவரது மனைவி வாமா. இவர்களுக்கு சுமையா என்ற மகள் உள்ளனர்.
சம்பவத்தன்று அலாவுதீன் அய்யாவாடி கூட்டு சாலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது வந்தவாசியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற கார் அலாவுதீன் மீது மோதியது.
இதில் அலாவுதீன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரநை்து வந்த வந்தவாசி வடக்கு போலீசார் அலாவுதீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story






