search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
    X

    விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

    • குழந்தை இல்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே உள்ள அத்தி கிராமத்தைச் சேர்ந்த தாந்தோணி மகன் போஸ் (வயது 30), இவரது மனைவி முனியம்மாள் (28), இருவருக்கும் திருமணம் ஆகி 8 வருடங்களாக குழந்தை இல்லை.

    இதனால் ஏக்கத்தில் மன வருத்தத்தில் போஸ் மதுவுக்கு அடிமையாகி தினமும் குடித்துக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம் மதுவில் பயிருக்கு அடிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று போஸ் இறந்தார்.

    இதுகுறித்து அனக்காவும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

    Next Story
    ×