என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாய்லர் வெடித்து தீக்காயம் அடைந்த பெண் சாவு
- ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு காளிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 47). இவரது மனைவி கவிதா (38).
இவர் ஒண்ணுபுரம் கிராமத்தில் நாக நதி ஆற்றங்கரையில் உள்ள ரைஸ் மில்லில் வேலை செய்து வந்தார். கவிதா கடந்த 13-ந்தேதி ரைஸ் மில்லுக்கு வேலைக்கு சென்றார். அப்போது பாய்லர் ஒன்று வெடித்துள்ளது.
இதில் அருகில் இருந்த கவிதாவுக்கு தீக்காயம் ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். அங்கிருந்த ஊழியர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா பரிதாபமாக இருந்தார்.
இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசில் கவிதாவின் கணவர் சங்கர் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






