search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உலக மக்கள் நலம்பெற வேண்டி திருவிளக்கு பூஜை
    X

    திரவுபதி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்த காட்சி.

    உலக மக்கள் நலம்பெற வேண்டி திருவிளக்கு பூஜை

    • அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடந்தது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூர் திரவுபதி அம்மன் கோவிலில் உலக மக்கள் நலம் பெற வேண்டியும், இயற்கை வளங்கள் பெறவும், மழைவளம் வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.

    காலையில் திரவுபதி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. மாலையில், உப்பு மற்றும் கலர் பவுடர்களால் ஸ்ரீகுபேர சக்கரம் வரையப்பட்டு, அதில் குத்து விளக்குவைத்தும், 450 பெண்கள் கலந்துகொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது.

    திருவண்ணாமலை ஜி.ஆர்.டி.தங்கமாளிகை மேலாளர் மூர்த்தி, சென்னை ஸ்டடி சென்டர் தமிழ்வேந்தன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றிவைத்து, விழாவை தொடங்கி வைத்தனர்.

    ஆரிய வைசிய சமாஜ சங்க துணை தலைவர் கே.என்.பாலசுப்பிரமணியன், சமூக ஆர்வலர் என்.ரமேஷ், ஏழுமலை, செல்வன், சண்முகம், காஞ்சிபுரம் சுந்தர், திருவண்ணாமலை சிவா, விழுப்புரம் அரவிந்தன், செய்யாறு ஜெயவேலு, செஞ்சி விஜயகுமார், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் கவிதா ஏழுமலை, பாக்யராஜ், கே.பி.மணி, ஆதிபராசக்தி மன்ற செவ்வாடை தொண்டர்கள் பாலசுப்பிரமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×