என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓடும் காரில் திடீர் தீ
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
- அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டது
ஆரணி:
வேலூரில் இருந்து ஆரணி நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது கமண்டல நாக நதி ஆற்றுப்பாலம் அருகே வந்த போது கார் பழுதாகி சாலையின் நடுவே நின்றது. பின்னர் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது.
இதனால் அந்தப் பகுதி முழுவதும் புகைமூட்டம் காணப்பட்டது. இது குறித்து ஆரணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் எரிந்து கொண்டிருந்த காரில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதனால் ஆரணி காந்தி ரோடு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






