search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணுவ வீரர் திடீர் சாவு
    X

    ராணுவ வீரர் திடீர் சாவு

    • உடல்நிலை பாதிப்பால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்,

    கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். அவரது மகன் கோகுல்குமார் (வயது 30), ராணுவ வீரர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோகுல்குமார் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கண்ணமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×