என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    கடையை உடைத்து திருட்டு
    X

    கடையை உடைத்து திருட்டு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 2 வாலிபர்கள் கைது
    • போலீசார் விசாரணை

    தூசி:

    செய்யாறு தாலுகா உக்கம் பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் .

    இவர் ஆக்கூர் கூட்டு ரோட்டில் பங்க் கடை வைத்துள்ளார் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.

    மறுநாள் காலை கடைக்கு வந்து பார்த்தபோது , கடை முன்பு இருந்த இரும்பு வளையத்தை உடைத்து உள்ளே சென்று கடையில் வைத்திருந்த பொருட்கள் திருட்டுப் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீதுதூசிபோலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப் - இன்ஸ்பெக்டர் சுரேஷ் பாபு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஆக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சம்பத் மகன் கோபால் சாமி ( வயது 19 ), ஏழுமலை மகன் தேவராஜ் ( 19 ) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.

    Next Story
    ×