என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மது கடையை அகற்றகோரி பொதுமக்கள் சாலை மறியல்
- உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி
- ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சீசமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட தீபா நகரில் இயங்கி வரும்
அரசு மதுபான கடையை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் செய்யாறு ஒன்றியம் உள்ளிட்ட பல இடங்களில் புகார் மனு அளித்துள்ளனர்.
மேலும் அரசு டாஸ்மாக் கடை அருகாமையில் பழமை வாய்ந்த ஸ்ரீ பச்சையம்மன் கோவில் உள்ளதாலும் பள்ளிகள் உள்ளதாலும் இதனால் பொதுமக்கள் இடையூறு ஏற்படுவதாக புகாரில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இதுவரையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பதால் ஆத்திரமடைந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரணி வாழைபந்தல் சாலையில் அகற்ற கோரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசு மதுபான கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் ஒரு நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்