கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை

சுவர் ஏறி குதித்து துணிகரம் போலீசார் விசாரணை
கோவில் உண்டியல் உடைத்து பணம் கொள்ளை
Published on

ஆரணி:

ஆரணி டவுன் வி.ஏ.கே நகரில் பழமை வாய்ந்த சக்தி விநாயகர் கோவில் உள்ளது.

நேற்று இரவு அங்கு பைக்கில் வந்த 3 பேர் கோவிலின் சுவற்றில் ஏறி குதித்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை வழக்கும் போல் கேட்டை திறந்து உள்ளே சென்ற அர்ச்சகர் உண்டியல் உடைத்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார்.

நிர்வாகிகள் கோவிலுக்கு வந்து பார்த்தபோது உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது இது குறித்து ஆரணி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கோவில் அருகே உள்ள கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 3 பேர் பைக்கில் வந்து சுவர் ஏறி குறித்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கோவிலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பும் கொள்ளையில் அதே நபர்கள் மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com