search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமி கடத்தி திருமணம்
    X

    சிறுமி கடத்தி திருமணம்

    • 4 மாதங்களுக்கு பின்பு டிரைவர் கைது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    கலசப்பாக்கம் அடுத்த நீலன்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி (வயது 27) டிரைவர்.

    அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-1 படிக்கும் மாணவியை கடந்த 4 மாதத்துக்கு முன்பு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய போது மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

    இது சம்பந்தமாக மாணவியின் தந்தை கலசப்பாக்கம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கடந்த 4 மாதங்களாக தலைமறைவாக இருந்த செல்லப்பாண்டி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியுடன் செல்லப்பாண்டியை கைது செய்து அழைத்து வந்தனர். அந்த மாணவியை திருவண்ணாமலை அரசு காப்பகத்தில் ஒப் படைக்கப்பட்டுள்ளார்.

    மேலும் செல்ல பாண்டியனை போக்சோ சட்டத்தில் கலசப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×