search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேத்துப்பட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு
    X

    சேத்துப்பட்டில் பெண்ணிடம் செயின் பறிப்பு

    • திருமணத்திற்காக சென்ற போது விபரீதம்
    • பைக்கில் வந்து பறித்து சென்றனர்

    சேத்துப்பட்டு:

    சேத்துப்பட்டு அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் லாரி டிரைவர். இவரது மனைவி சுகன்யா (வயது 35). இருவரும் நேற்று மு்தினம் இரவு பைக்கில். புதூர், கிராமத்திலிருந்து சேத்துப்பட்டில் நடந்த உறவினர் திருமணத்திற்காக சென்றனர்.

    சேத்துப்பட்டு, பழம்பேட்டை, பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு நின்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த 2 பேர் பைக்கில் ஹெல்மெட் அணிந்த வந்தனர்.

    திடீரென சுகன்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை மர்ம கும்பல் பறித்துச் சென்றனர்.

    உடனே சுகன்யா, கத்தி கூச்சலிட்டார். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், உறவினர்கள், பைக்கில் மர்ம கும்பலை பிடிக்க முயன்றனர், ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்து ஜெயபிரகாஷ், நேற்று சேத்துப்பட்டு பேரீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×