என் மலர்
உள்ளூர் செய்திகள்

தந்தை, மகன்கள் மீது தாக்குதல்
- ஒருவர் கைது.
- போலீசார் விசாரணை.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). இவரது மகன்கள் லோகேஷ், ராகுல் ஆகியோருடன் கடந்த 25ம்தேதி இரவு நஞ்சுகொண்டாபுரம் கிராமத்தில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சி பார்த்து விட்டு இரவு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது வழியில் ராமச்சந்திரபுரம் குளம் அருகே இருந்த ரெட்டிபாளையம் சுரேஷ், நவீன், சிங்கிரிகோயில் சூரியா, மேல்கல்பட்டு மோகன்ராஜ் ஆகியோரிடம் வழிவிடும் படி கேட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து, சிவக்குமார், ராகுல், லோகேஷ் ஆகியோரை தாக்கியுள்ளனர்.இதில் படுகாயமடைந்த 3 பேரூம் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து லோகேஷ் கண்ணமங்கலம் போலீசில் புகார் செய்ததார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர். நவீன், சுரேஷ், சூரியா ஆகியோரை தேடி வருகின்றனர்.






