search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காமாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
    X

    காமாட்சி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

    • 108 பெண்கள் கலந்து கொண்டனர்
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    வந்தவாசி:

    வந்தவாசி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் ஆடி திருவிழா முன்னிட்டு 108 சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை விமர்சியாக நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீ காமாட்சி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    இதைதொடர்ந்து சுமங்கலி பெண்களை வரிசையாக அமர வைத்து வேதம் மந்திரங்கள் முழங்க திருவிளக்கு பூஜை நடைபெற்றது. சுமங்கலி பெண்கள் திருவிளக்கிற்கு குங்கும் அர்ச்சனை செய்தனர்.

    இதையடுத்து மங்கள மேல வாத்தியங்கள் முழங்க ஸ்ரீ காமாட்சி அம்மனுக்கு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது இந்த திருவிளக்கு பூஜையை காண திரளான சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு ஸ்ரீ காமாட்சி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

    Next Story
    ×