என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
24 மணி நேரம் தொடர்ந்து நடந்த 108 நாதஸ்வர, தவில் கலைஞர்களின் இசை விழா
- திருவண்ணாமலை கோவில் ராஜகோபுரம் முன்பு நடந்தது
- மகா சிவராத்திரியையொட்டி சிறப்பு ஏற்பாடு
திருவண்ணாமலை:
மகா சிவராத்திரியையொட்டி திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ் வரம், தவில் இசை சங்கம் சார்பில் 41-ம் ஆண்டு இசை விழா திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பு நேற்று நடைபெற்றது.
சங்கத்தின் தலைவரான நாதஸ் வர கலைமாமணி பிச்சாண்டி தலை மையில் 108 நாதஸ்வர மற்றும் தவில் இசை கலைஞர்களின் இசை விழா நடைபெற்றது. நேற்று அதிகாலை 5 மணிக்கு தொடங்கிய இசை விழா, 24 மணி நேரம் நடைபெற்று இன்று அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்தது.
கவுரவத் தலைவர் பூபாலன், செயலாளர் ஏழுமலை, துணை கவுரவத் தலைவர் முருகேசன், துணை செயலாளர் கார்த்திகேயன், இணை தலைவர் பாலகணேசன் மற்றும் மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்று, மங்கல இசை மற்றும் பல்வேறு ராகங்களில் வாசித்தனர். மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றன. இசை விழாவை, அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்