என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் திடீர் சாலை மறியல்
- கமிட்டியின் கண்காணிப்பாளர் தானியங்களை எடை போடவில்லை
- ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
செய்யாறு:
செய்யாறு ஆற்காடு சாலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் இயங்கி வருகிறது.
நெல் மூட்டைகள் எடை போடவில்லை
தற்போது சொர்ணவாரி பயிரிட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்பட்ட நெல்களை மார்க்கெட் கமிட்டியில் கொண்டு வந்து உள்ளனர்.
இன்று காலையில் நெல்களை எடை போடும் தொழிலாளர்கள் எடை போட முயன்ற போது கமிட்டியின் கண்காணிப்பாளர் சரவணன் நெல், மணிலா, எள் உள்ளிட்ட தானியங்களை எடை போட வேண்டாம் என்றும் நிறுத்தி உள்ளார்.
2, 3 நாட்களாக நெல்லை கொண்டு வந்திருந்து காத்திருந்த விவசாயிகள் பாதிப்படையவே எடை போடாததை கண்டித்து செய்யாறு ஆற்காடு சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். டிஎஸ்பி செந்தில், இன்ஸ்பெக்டர் பாலு, சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ராம்குமார், கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் ஆகியோர் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி நெல்களை எடை போட நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர்.
விவசாயிகள் டிஎஸ்பி செந்தில் வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை கைவிட்டு மார்க்கெட் கமிட்டிக்கு சென்று விட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்