என் மலர்
உள்ளூர் செய்திகள்

சகதிக்காடாக மாறிய சாலை.
பலவஞ்சிபாளையத்தில் சகதிக்காடான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
- மழை நீர் தேங்கி சேறும் சகதியாக மாறியது.
- வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகின்றனர்.
வீரபாண்டி:
வீரபாண்டி பிரிவிலிருந்து பலவஞ்சிபாளையம் செல்லும் சாலையில் 4வது குடிநீர் குழாய் பணிக்கும் பணி சென்ற வாரம் நடந்தது. அப்போது சாலையின் இடது புறமாக சாலையை தோண்டி குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. பணி முடிவுற்ற நிலையில் சரியாக மண் சமன்செய்யப்படாததால் நேற்று பெய்த மழை நீர் தேங்கி சேறும் சகதியாக மாறியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் இதில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இந்த சாலை போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இரு சக்கர வாகன ஓட்டிகள் சேறும் சகதியாக உள்ள சாலையில் ஒதுங்க முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே உடனடியாக இந்த சேறும் சகதியாக உள்ள சாலையை சீரமைத்து தருமாறு வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story






