என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கழிவுநீா் கால்வாயை சுத்தப்படுத்த பணியாளா்கள் நியமிக்க வலியுறுத்திதிருமுருகன்பூண்டி நகராட்சி கவுன்சிலர்கள் போராட்டம்
- தனியாா் தூய்மைப்பணியாளா்கள் கழிவுநீா் கால்வாய்களை சுத்தப்படுத்துவதில்லை.
- தூய்மைப்பணிகள் தனியாா்மயமாக்கப்பட்ட பின் குப்பைகள் மட்டுமே அகற்றப்படுகின்றன.
அவிநாசி
திருமுருகன்பூண்டி நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம் நகர்மன்றத் தலைவா் குமாா் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையா் அப்துல் ஹாரிஸ் முன்னிலை வகித்தாா். இதில் நகராட்சியிலுள்ள 27 வாா்டுகளிலும் உள்ள கழிவுநீா் கால்வாயை சுத்தப்படுத்துவதற்கு தனித்தனியாக ஆள்கள் நியமிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக., உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் வலியுறுத்தினா். இது குறித்து தீா்மானம் நிறைவேற்றக்கோரி ஆணையரிடம் கோரிக்கை வைத்தனா்.
ஆனால், கழிவுநீா் கால்வாய் தூய்மைப்படுத்துவதற்கு ஆட்கள் நியமிப்பது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நகர்மன்ற தலைவா் குமாா் உள்ளிட்ட திமுக.,வினா், அதிமுக., மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சி உறுப்பினா்களும் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.பிற்பகல் தொடங்கிய உள்ளிருப்பு போராட்டம் மாலை வரை நீடித்தது. இதனால் நகர்மன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
இது தொடா்பாக நகர்மன்றத்தலைவா் குமாா் கூறியதாவது:- நகராட்சியில் தூய்மைப்பணிகள் தனியாா்மயமாக்கப்பட்ட பின் குப்பைகள் மட்டுமே அகற்றப்படுகின்றன. தனியாா் தூய்மைப்பணியாளா்கள் கழிவுநீா் கால்வாய்களை சுத்தப்படுத்துவதில்லை. இதனால், கழிவுநீா் கால்வாய்களில் கழிவுகள் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் நோய் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.
கழிவுநீா் கால்வாயை சுத்தப்படுத்த நகராட்சியில் உள்ள 27 வாா்டுகளுக்கும் தனித்தனியாக ஆட்களை நியமிக்க வேண்டும் என்பது அனைத்து கட்சி உறுப்பினா்களின் கோரிக்கையாக உள்ளது. எனவே இது தொடா்பாக தீா்மானத்தை நிறைவேற்றி உடனடியாக ஆட்களை நியமிக்க ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, குடிநீா் பற்றாக்குறையை போக்குவதற்கு அம்ரூத் திட்டத்தின் கீழ் திருமுருகன்பூண்டி நகராட்சியை சோ்க்க வேண்டும் என்றாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்