search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவினாசி அருகே வாலிபர் மர்மச்சாவு
    X

    கோப்புபடம்.

    அவினாசி அருகே வாலிபர் மர்மச்சாவு

    • வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    அவினாசி :

    அவிநாசி அருகே தெக்கலூரில் நாய்கள் கடித்த நிலையில் கிடந்த ஆண் உடலை மீட்டு போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தெக்கலூா்-கோவை சாலையில் தனியாா் நூற்பாலைக்கு அருகே உள்ள வனப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கு நாய்கள் கடித்த நிலையில் கிடந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

    மேலும் இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், இறந்த நபா் யாா், அவா் கொலை செய்யப்பட்டரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    Next Story
    ×