search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியிடம் பணம் பறித்த வாலிபர் கைது
    X

    கோப்புபடம்.

    மூதாட்டியிடம் பணம் பறித்த வாலிபர் கைது

    • விஜயா கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • பல்லடம் அரசு மருத்துவமனை எதிரே நின்று கொண்டிருந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அண்ணாநகரைச் சேர்ந்த சேதுராமன் மனைவி விஜயா(வயது 53). இவர் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பல்லடம் அரசு மருத்துவமனை எதிரே நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவர் அருகே வந்த வாலிபர் விஜயா வைத்திருந்த சுருக்குப்பையை பிடுங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அதிர்ச்சி அடைந்த விஜயா திருடன், திருடன், என சத்தம் போட அக்கம்- பக்கம் உள்ளவர்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் ஆயிரம்ரூபாய் பணத்துடன் இருந்த சுருக்குப் பையை விஜயாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த வாலிபரை விசாரணை செய்தபோது அவர் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டை சேர்ந்த திருமலைசாமி மகன் சுரேஷ்குமார்,24, என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×