என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
வெள்ளகோவிலில் மின்கம்பத்தில் பைக் மோதி தொழிலாளி சாவு
- கூலித் தொழிலாளியை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
- நிலை தடுமாறி ரோட்டின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விட்டார்.
வெள்ளகோவில்:
வெள்ளகோவில் அருகே உள்ள சின்னம்மன்கோவில் பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (45), கூலித் தொழிலாளி. இவர் நேற்று லக்கமநாயக்கன்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது நிலை தடுமாறி ரோட்டின் ஓரத்தில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி விட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே முருகன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள் உள்ளனர். இந்த விபத்து குறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story






