என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் 25ந்தேதி பொது ஏலம்
- மொத்தம் 51 வாகனங்கள் வரும் ஜூலை 25ந் தேதி காலை 10 மணி அளவில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
- மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் இந்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் ஜூலை 25 ந் தேதி பொது ஏலத்தில் விடப்படுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம் வருமாறு:-
திருப்பூா் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்ட்ட 34 இருசக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 51 வாகனங்கள் வரும் ஜூலை 25ந் தேதி காலை 10 மணி அளவில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது.
திருப்பூரை அடுத்த அவிநாசி மடத்துப்பாளையம் சாலையில் சிவகுமாா் ரைஸ் மில் காம்பவுண்டில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் இந்த வாகனங்கள் பொது ஏலத்தில் விடப்படவுள்ளது. ஆகவே, மேற்கண்ட ஏலத்தில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்