search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடத்தில் இரு தரப்பினர் மோதல்
    X

    கோப்புபடம்.

    பல்லடத்தில் இரு தரப்பினர் மோதல்

    • மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.
    • வார்டு மக்களுக்கும், நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஸ்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் நகராட்சி 8-வது வார்டு பச்சாபாளையத்தில்,நகராட்சி நிர்வாகம் சார்பில் மின் மயானம் அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதில் அந்த வார்டு மக்களுக்கும், நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா ஜெகதீஸ்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

    இதில் கோவிலில் தன்னை வழிபட அனுமதிக்கவில்லை எனக் கூறி சுகன்யா ஜெகதீஷ் தரப்பில் பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதேபோல நகர்மன்ற உறுப்பினர் சுகன்யா கணவருடன் சேர்ந்து மிரட்டுவதாக மற்றொரு தரப்பினரும் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில், விக்னேஸ்வரன் என்பவர் கோவில் கணக்கு வழக்குகள் குறித்து வாட்ஸ் அப்பில் குறிப்பு வைத்திருந்ததாகவும் அதனை, வெங்கடேஷ் என்பவர் தட்டிக் கேட்டதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

    இதுகுறித்து விக்னேஸ்வரன் மனைவி ஆனந்தி கொடுத்த புகாரின் பேரில் வெங்கடேஷ், ரங்கராஜ், செல்வராஜ், மற்றும் சிலர் மீதும், இதேபோல வெங்கடேஷ் அளித்த புகாரின் பேரில் விக்னேஸ்வரன், ஆனந்தி, ஜெகதீஷ், தர்மலிங்கம் உள்ளிட்ட சிலர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×