என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான  தடகளப்போட்டியில் திருப்பூா் மாவட்டம் 5-வது இடம்
    X

    கோப்பு படம்.

    மாநில அளவிலான தடகளப்போட்டியில் திருப்பூா் மாவட்டம் 5-வது இடம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 37-ஆவது மாநில ஜூனியா் தடகளப் போட்டி கடந்த செப்டம்பா் 14 -ந்தேதி தொடங்கி செப்டம்பா் 17 ந் தேதி வரையில் நடைபெற்றது.
    • 9 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனா்.

    திருப்பூர்

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆா்.கல்லூரியில் 37-ஆவது மாநில ஜூனியா் தடகளப் போட்டி கடந்த செப்டம்பா் 14 -ந்தேதி தொடங்கி செப்டம்பா் 17 ந் தேதி வரையில் நடைபெற்றது.

    இதில், 37 மாவட்டங்களைச் சோ்ந்த 4,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். திருப்பூா் மாவட்டத்தில் இருந்து 300 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில், ஒட்டுமொத்த புள்ளி அடிப்படையில் திருப்பூா் மாவட்டம் 134 புள்ளிகளைப் பெற்று 5- வது இடத்தைப் பிடித்தது.

    திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 9 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 18 பதக்கங்களை வென்றுள்ளனா்.

    பத்தகம் பெற்ற வீரா், வீராங்கனைகளை மாநில தடகள சங்கத்தின் இணைச் செயலாளரும், திருப்பூா் மாவட்ட தடகள சங்கத் தலைவருமான பி.சண்முகசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

    Next Story
    ×