search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்வருகிற 5-ந்தேதி நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    கோவில்வழி பெரும்பண்ணை வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்வருகிற 5-ந்தேதி நடக்கிறது

    • மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது.
    • 108 ராமானுஜ ஸ்நபன கலசம், மகா சங்கல்பம், 108 கலச அபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் அருகே கோவில் வழியில் பெரும்பண்ணை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருக்கல்யாண மஹோத்ஸவ நிகழ்ச்சி அடுத்த மாதம் 5-ந் தேதி நடக்கிறது.

    மாலை 4 மணி முதல் 7 மணி வரை நடைபெறும் இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் வரதராஜ பெருமாளுக்கும் பெருந்தேவி தாயாருக்கும் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. முன்னதாக வருகிற 4-ந் தேதி காலை 8 மணிக்கு வாசுதேவ புண்யாகம், 108 ராமானுஜ ஸ்நபன கலசம், மகா சங்கல்பம், 108 கலச அபிஷேகம், தீபாராதனை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து 5-ந்தேதி திருக்–கல்–யாண நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×