என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே வீடு புகுந்து நகை -பணம் திருட்டு
    X

    பொருட்கள் சிதறி கிடந்த காட்சி.

    பல்லடம் அருகே வீடு புகுந்து நகை -பணம் திருட்டு

    • வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வீடு திரும்பினர்.
    • தங்க மோதிரம், கம்மல் உள்ளிட்ட 1 3/4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள வாவிபாளையம் ஊராட்சி கோட்டப்பாளையம் காலனி பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவரது மகன் சின்னான் , கூலித் தொழிலாளி.சின்னான் மற்றும் அவரது குடும்பத்தினர் வேலைக்கு சென்று விட்டு நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் வீடு திரும்பினர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் பீரோவில் பார்த்தபோது அதில் வைத்திருந்த தங்க மோதிரம், கம்மல் உள்ளிட்ட 1 3/4 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. மேலும் ரொக்கம் ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து காமநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×