search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு
    X

    வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    பிளஸ்-2 தேர்வு வினாத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு துப்பாக்கியுடன் போலீஸ் பாதுகாப்பு

    • பிளஸ்-2 தேர்வு 93 தேர்வு மையங்களில் நடக்கிறது.
    • 26 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

    திருப்பூர் :

    தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வுகள் நாளை 13-ந் தேதி முதல் ஏப்ரல் மாதம் 3-ந் தேதி வரை நடக்கிறது. பிளஸ்-1 தேர்வு 14-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 5-ந் தேதி வரை நடக்கிறது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் ஏப்ரல் மாதம் 6-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி முடிகிறது.

    பிளஸ்-2 தேர்வு 93 தேர்வு மையங்களில் நடக்கிறது. 213 மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் 25 ஆயிரத்து 664 மாணவ-மாணவிகள், 496 தனித்தேர்வர்கள் என மொத்தம் 26 ஆயிரத்து 160 பேர் தேர்வு எழுத உள்ளனர். இதற்காக 6 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியைமேற்கொள்ள உள்ளனர்.

    பிளஸ்-1 தேர்வு 93 தேர்வு மையங்களில் நடக்கிறது. 217 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 24 ஆயிரத்து 556 மாணவ-மாணவிகள், 214 தனித்தேர்வர்கள் என மொத்தம் 24 ஆயிரத்து 770 பேர் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளர்களாக 93 தலைமை ஆசிரியர்கள், 93 துறை அலுவலர்கள், 1,608 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கு பணியாற்ற முதன்மை கண்காணிப்பாளராக 106 தலைமை ஆசிரியர்கள், 106 துறை அலுவலர்கள், 1,780 அறை கண்காணிப்பாளர்களாக 1,780 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேல்நிலை பொதுத்தேர்வுக்கு முதன்மை கல்வி அதிகாரி மூலமாக 157 ஆசிரியர்கள் கொண்ட பறக்கும்படை அமைக்கப்பட உள்ளது. இந்த முன்னேற்பாடுகள் அனைத்தையும் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    Next Story
    ×