search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    6 மாதங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
    X

    கோப்புபடம்

    6 மாதங்களாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

    • வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட 40 வழக்குகள் உள்ளது.
    • கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.

    அவிநாசி:

    சேவூா் அருகே புதுச்சந்தை வரப்பளத்தான் தோட்டத்தைச் சோ்ந்த கருப்புசாமி மகன் புக்கான் (எ) மூா்த்தி (வயது 39). அவிநாசி, குன்னத்தூா், பெருமாநல்லூா், சேவூா், புன்செய்புளியம்பட்டி, வரப்பாளையம் ஆகிய காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக இவா் மீது 40 வழக்குகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

    கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த இவரை சேவூா் காவல் உதவி ஆய்வாளா்கள் சா்வேஸ்வரன், சேகா், தலைமைக் காவலா் ஆகியோா் கொண்ட தனிப்படை போலீசார் தேடி வந்தனா்.

    இந்த நிலையில் ரகசிய தகவலின்படி, ராயா்பாளையம் அருகே வண்ணாம்பாறை பகுதியில் தலைமறைவாக இருந்த புக்கான் (எ) மூா்த்தியை தனிப்படை போலீசார் பிடித்து வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.

    Next Story
    ×