என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்
பல்லடத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
- சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
- அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள காட்டூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகன் புகழேந்தி (வயது 23). இவர் திருப்பூரில் உள்ள வழக்கறிஞர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று வேலை முடிந்து இரவு நேரத்தில் தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியதாக தெரிகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட புகழேந்தி பலத்த காயத்துடன் கீழே விழுந்தார்.
உடனே அவரை அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடோடி வந்து அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






