என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை - பேச்சுப்போட்டி
- தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா சூட்டிய ஜூலை-18-ம் நாளினையே“தமிழ்நாடு நாளாக” இனி கொண்டாடப்படும்
- போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்
திருப்பூர்:
திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா சூட்டிய ஜூலை-18-ம் நாளினையே"தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின்படி தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
இதன்படி 18-7-2023-தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் 12-7-2023 (புதன்கிழமை) அன்று திருப்பூர் எல்.ஆர்.ஜி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் காலை 10 மணி முதல் பள்ளி மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும்பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகள் மட்டும் கலந்து கொள்ளலாம். கலந்துகொள்ள விரும்பும் மாணவ-மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வர வேண்டும். ஒரு பள்ளியிலிருந்து ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்க ப்படுவார்கள்.
போட்டிக்கான தலைப்புகளானது கட்டுரைப்போட்டி- தமிழ் இலக்கிய வரலாற்றில் முத்தமிழறிஞர் கலைஞரின் சுவடுகள்.பேச்சுப்போட்டி- தமிழ்த் திரை உலகத்தை புரட்டிப்போட்ட முத்தமிழறிஞர் கலைஞரின்எழுதுகோல்.இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10,000, இரண்டாம் பரிசு ரூ.7,000 மற்றும் மூன்றாம்பரிசு ரூ. 5,000 என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.
போட்டிகள் நடத்தப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறும் கலெக்டர் தெரிவித்துள்ளார்.






