search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் ரூ. 22 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்
    X

    கோப்புபடம்.

    வெள்ளகோவிலில் ரூ. 22 லட்சத்துக்கு சூரியகாந்தி விதை ஏலம்

    • 46ஆயிரத்து 471கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • அதிகபட்சமாக ரூ.51.39 க்கும், குறைந்தபட்சம் ரூ.44.59 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வார ம்தோறும் செவ்வாயன்று தேங்காய் பருப்பும் வியாழனன்று சூரியகாந்தி விதையும் ஏலம் நடைபெற்று வருகிறது. ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை. திருப்பூர், ஈரோடு மாவட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தேங்காய் பருப்பு மற்றும் சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து செல்கிறார்கள்.

    நேற்று வியாழக்கிழமை 43 விவசாயிகள் கலந்து கொண்டு 46ஆயிரத்து 471கிலோ சூரியகாந்தி விதையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ள கோவில், காங்கேயம், ஈரோடு பகுதியைச் சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ சூரியகாந்திவிதை அதிகபட்சமாக ரூ.51.39 க்கும், குறைந்தபட்சம் ரூ.44.59 க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று மொத்தம் ரூ. 22லட்சத்து 6 ஆயிரத்து 843க்கு வணிகம் நடைபெற்றது. இத்தகவலை வெள்ளகோவில் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சி. மகுடே ஸ்வரன் தெரிவித்து ள்ளார்.

    Next Story
    ×