search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூரில் வாலிபரை கத்தியால் குத்தி மோட்டார் சைக்கிள் - செல்போன் பறிப்பு
    X

    கோப்புபடம்

    திருப்பூரில் வாலிபரை கத்தியால் குத்தி மோட்டார் சைக்கிள் - செல்போன் பறிப்பு

    • அரவிந்தனிடம் இருந்த செல்போன் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • அரவிந்தனை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் நல்ல கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்தன் (வயது 23). தனியார் நிறுவனத்தில் பிரிண்டிங் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார்.

    பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் கருமத்தம்பட்டி செல்வதற்காக சென்று கொண்டிருந்தார். பூண்டி கன்னிமார் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது அரவிந்தனுக்கு போன் வந்தது. இதனையடுத்து அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை நோட்டுமிட்டு அரவிந்தனை கத்தியால் குத்தியதோடு தலையில் பயங்கரமாக அடித்தனர். இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதனை அடுத்து 3 பேரும் அரவிந்தனிடம் இருந்த செல்போன் பணம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். படுகாயம் அடைந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு அவிநாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அரவிந்தனை மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் திருமுருகன் பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வாலிபரை தாக்கி செல்போன் மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற கும்பலை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×