என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உடுமலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    கோப்புபடம்

    உடுமலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் விழிப்புணர்வு வழங்கிட வேண்டும்.
    • விழிப்புணர்வு பணி மத்திய பஸ் நிலையம் மற்றும் வள்ளியம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.

    உடுமலை:

    உடுமலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகள் தொடர்பாக நாடக குழுவினர் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொதுமக்கள்,குடியிருப்பு பகுதிகள்,பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதியில் விழிப்புணர்வு வழங்கிட நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தெரிவித்து இருந்தார்.

    இதையடுத்து உடுமலை நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்றத் தலைவர் உத்தரவின் பேரில் மத்திய பஸ் நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.வெங்கடாசல கனக நாடக சபை குழுவினர் பொதுமக்களுக்கு திடக்கழிவு மேலாண்மை பணிகளான கழிவுகளை தரம் பிரித்து வழங்குதல்,மஞ்சப்பை உபயோகப்படுத்துதல், பொது இடங்களில் இயற்கை உபாதைகள் மற்றும் எச்சில் துப்புவதை தவிர்த்தல்,புகைப்பிடிப்பதை தவிர்த்தல் என பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் ஏற்படுத்தினர்.

    விழிப்புணர்வு பணி மத்திய பஸ் நிலையம் மற்றும் வள்ளியம்மாள் காலனி ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.அப்போது என் குப்பை என் பொறுப்பு, மக்கும் குப்பை மக்காத குப்பை, டெங்கு காய்ச்சல் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, வீட்டுக்கு ஒரு சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசியும் பாடல்களை பாடி நடனம் ஆடியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×