என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தடகள போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வழியனுப்பு விழா
- சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தப்பட்டு வருகிறது.
- 35-வது மாநில ஜூனியர் ஓப்பன் தடகள போட்டிகள் நடைபெறுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் திருமுருகன்பூண்டி சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்தப்பட்டு வருகிறது. இதில் பயிற்சி பெற்று வரும் 100-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் மாவட்ட, மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் இன்று (புதன்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் 35-வது மாநில ஜூனியர் ஓப்பன் தடகள போட்டிகள் நடைபெறுகிறது. இதில் திருமுருகன்பூண்டி சாய் கிருபா ஸ்போர்ட்ஸ் அகாடமியை சேர்ந்த 23 பேர் பயிற்சியாளர் பாரதி தலைமையில் கலந்து கொள்கின்றனர். அந்த போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு வழியனுப்பு விழா சுகன் சுகா மெடிக்கல் சென்டர் வளாகத்தில் அகாடமி தலைவர் டாக்டர் எஸ்.சுந்தரன் தலைமையில் நடைபெற்றது. இதில் செயலாளர் டாக்டர் பி.கார்த்திகை சுந்தரன், பொருளாளர் செங்கோடன், பயிற்சியாளர் பாரதி ஆகியோர் கலந்து கொண்டு, வீரர்-வீராங்கனைகளை வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்