search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சந்திரகாச்சி-மங்களூரு வாராந்திர ரெயில் மீண்டும் இயக்கம்
    X

    கோப்புபடம்.

    சந்திரகாச்சி-மங்களூரு வாராந்திர ரெயில் மீண்டும் இயக்கம்

    • மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி - மங்களூரு சென்டர் வாராந்திர ரெயில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
    • திருப்பூருக்கு வெள்ளிக்கிழமை இரவு 11.38 மணிக்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை 7.13 மணிக்கு வந்து செல்லும்.

    திருப்பூர் :

    மேற்குவங்க மாநிலம் சந்திரகாச்சி - மங்களூரு சென்டர் வாராந்திர ரெயில் கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இயக்கப்படுகிறது.

    சந்திரகாச்சியில் இருந்து மங்களூரு செல்லும் விவேக் வாராந்திர ரெயில் (எண்.22851) வியாழக்கிழமை தோறும் மதியம் 2.55 மணிக்கு சந்திரகாச்சியில் புறப்பட்டு சனிக்கிழமை காலை 8.50 மணிக்கு மங்களூரு சென்றடையும். இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த ரெயில் திருப்பூருக்கு நாளை வெள்ளிக்கிழமை இரவு 11.38 மணிக்கு வந்து செல்லும். இதுபோல் மங்களூரு - சந்திரகாச்சி செல்லும் விவேக் வாராந்திர ரெயில் (எண்.22852) சனிக்கிழமை தோறும் மங்களூருவில் இரவு 11 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை தோறும் மாலை 5.15 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.

    வருகிற 16-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7.13 மணிக்கு திருப்பூருக்கு வந்து செல்லும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×