search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணல் அள்ளிய லாரி சிறைப்பிடிப்பு
    X

    சிறைபிடிக்கப்பட்ட லாரி.

    மணல் அள்ளிய லாரி சிறைப்பிடிப்பு

    • அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர்.
    • ரோடு ஓரங்களில் கொட்டப்படுவதற்காக மண் எடுக்கப்படுகிறது என்பது தெரியவந்தது.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிபாளையம் பகுதியில், அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் லாரிகளில் ஏற்றிக்கொண்டு இருந்தனர். அவ்வழியே சென்ற பொதுமக்கள் இது குறித்து கேட்டபோது முறையான அனுமதி இன்றி மண் எடுப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த வாகனங்களை சிறைபிடித்த பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலர், பல்லடம் தாசில்தார் ஆகியோருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடம் வந்த கிராம நிர்வாக அலுவலர் மண் எடுத்தவர்களிடம் விசாரணை செய்த போது, ரோடு ஓரங்களில் கொட்டப்படுவதற்காக மண் எடுக்கப்படுகிறது என்பது தெரியவந்தது. இதையடுத்து உரிய அனுமதி பெற்று எடுக்க வேண்டும் என அந்த வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×