search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.89 கோடிக்கு பருத்தி விற்பனை
    X

    கோப்புபடம்

    மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.89 கோடிக்கு பருத்தி விற்பனை

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.
    • 797 விவசாயிகள் தங்களுடைய 8,707 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.89 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 797 விவசாயிகள் தங்களுடைய 8,707 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.

    மொத்த வரத்து 2,724 குவிண்டால்.திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சோ்ந்த 20 வணிகா்கள் பருத்தியை வாங்க வந்திருந்தனா்.பருத்தி குவிண்டால் ரூ. 6,450 முதல் ரூ. 7,619 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 7,050. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.1.89 கோடி.ஏலத்துக்கான ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு செயலாளா் சுரேஷ்பாபு, விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    Next Story
    ×