search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாராபுரத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்
    X

    கோப்பு படம்.

    தாராபுரத்தில் சாலை அமைக்கும் பணி தொடக்கம்

    15-வது மத்திய நிதி திட்டத்தின் சாலை நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தாராபுரம், ஆக. 13-

    தாராபுரத்தில் புதிதாக 15-வது மத்திய நிதி திட்டத்தின் சாலை நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும், சாக்கடை ரூ. 22 லட்சத்து 50 ஆயிரம் செலவிலும் அமைப்பதற்கான பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொண்டு சாக்கடை மற்றும் காங்கிரீட் சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தாராபுரம் நகர்மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர துணை செயலாளரும் கவுன்சிலருமான கண்ணன், நகர அவைத்தலைவர் கதிரவன் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×