search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜூன் 30-ந்தேதிக்குள் பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுகோள்
    X

    கோப்புபடம்.

    ஜூன் 30-ந்தேதிக்குள் பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுகோள்

    • வருமான வரித்துறை சார்பில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    • 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.

    திருப்பூர் :

    பான் கார்டுஎண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க, வரும் ஜூன் 30-ந் தேதி இறுதி நாள். பான் கார்டு எண் வைத்திருப்போர், ஆதாருடன் இணைப்பது கட்டாயம். இதற்காக வருமான வரித்துறை சார்பில் 5 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது 1,000 ரூபாய் அபராதம் செலுத்தி பான் ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.வரும் ஜூன் 30ந் தேதிக்குள் இணைக்காவிட்டால், பான் எண் செயலிழக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

    https://www.incometax.gov.in/iec/foportal/ என்ற இணைய பக்கத்துக்குள் சென்று லிங்க் ஆதார் ஸ்டேட்டஸ்,லிங்க் ஆதார் என்ற இணைப்புக்குள் சென்று இணைப்பை சரிபார்க்கவோ, இணைக்கவோ செய்யலாம்.என ெதரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×