search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை - பொதுமக்கள் அவதி
    X

    காங்கயம்,தாராபுரம் ரோட்டிலுள்ள களிமேடு பகுதியில் அரையும் குறையுமாக போடப்பட்டுள்ள, ஆபத்தான சாலையை படத்தில் காணலாம்,

    சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை - பொதுமக்கள் அவதி

    • தினசரி அதிக அளவில் இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
    • பழனிக்கு செல்ல இந்த பிரதான சாலையையே பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

    காங்கயம் :

    காங்கயம் - களிமேடு பகுதி போக்குவரத்து மிகுந்த ஒரு முக்கிய சாலையாகும். இந்த சாலை வழியாக தினசரி அதிக அளவில் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு செல்ல இந்த பிரதான சாலையையே பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி, போலீஸ் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நீதிமன்றம், வணிக வளாகங்கள் செயல்பட்டு வருவதால் எப்போதும் இங்கு போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

    இந்த நிலையில் காங்கயம் - தாராபுரம் சாலையில், காங்கயம் போலீஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து, அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் ஒரு புறம் பள்ளம் தோண்டப்பட்டு, சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தது.ஆனால் நீண்ட நாட்களாகியும் சாலை விரிவாக்க பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அவ்வப்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுவதும் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலை விரிவாக்க பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது பற்றி களிமேடு பகுதியான காங்கேயம் நகராட்சியின் 17-வது மற்றும் 16-வது வார்டு பொதுமக்கள் அமைச்சர். மு.பெ.சாமிநாதன்,தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்தி மாவட்ட கலெக்டர் டாக்டர்.வினித் ஆகியோருக்கு இது சம்பந்தமாக மனு கொடுத்துள்ளனர்.விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் பொது நலன் கருதி சாலை மறியல் செய்ய வேண்டி வரும் எனக் கூறியுள்ளனர்.

    Next Story
    ×