என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதி - கலெக்டர் வழங்கினார்
    X

    நிவாரண நிதியை கலெக்டர் வினீத் வழங்கிய காட்சி.

    நீரில் மூழ்கி உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு நிவாரண நிதி - கலெக்டர் வழங்கினார்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சாலை வசதி,குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 383 மனுக்களை பெறப்பட்டது.
    • வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சர்பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும்முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை , சாலை வசதி,குடிநீர் வசதி என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 383 மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் வினீத் உத்தரவிட்டார்.

    தொடர்ந்து பல்வேறு காலகட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த 5நபர்களின் வாரிசுதாரர்களுக்கு வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சர்பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.5 லட்சம்மதிப்பீட்டில் காசோலைகளை கலெக்டர் வினீத் வழங்கினார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் ,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன்,மாவட்ட வழங்கல் அலுவலர் மகாராஜ், மாவட்ட ஆதிதிராவிடர்நலத்துறை அலுவலர் ரவிச்சந்திரன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்துஅரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×